பேருந்தில் தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் வீடியோ காலில்  பேசிக்கொண்டிருப்பதை ரசிகர்களுக்கு காண்பித்தார் விராட் கோலி.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இப்போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சிறப்பாக பேட் செய்த சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

image

இந்நிலையில் போட்டி முடிந்த பின் இந்திய வீரர்கள் தங்கள் பேருந்தில் ஏறி ஹோட்டலுக்கு செல்லத் தயாரானார்கள். அப்போது, பேருந்தினுள் விராட் கோலியை கண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர். அந்நேரத்தில் விராட் கோலி தனது மனைவியான அனுஷ்கா ஷர்மாவுடன் செல்போனில் வீடியோ காலில்  பேசிக்கொண்டிருந்தார். ரசிகர்கள் ‘கோலி.. கோலி..’ என கூச்சலிட்டு ஆரவாரம் செய்யவே,  அனுஷ்கா ஷர்மாவுடன் வீடியோ காலில்  பேசிக்கொண்டிருப்பதை ரசிகர்களுக்கு தெரியும்படி காண்பித்தார் கோலி. அதனைக்கண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியில் மேலும் ஆர்ப்பரித்தனர். இதையடுத்து இந்திய வீரர்கள் பயணித்த பேருந்து அவ்விடத்தைவிட்டு கடந்து சென்றது.  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: ”நீயும் அரைசதம் அடிக்கணும்.. நானும்”- கே.எல்.ராகுல், சூர்யகுமார் பேசிவைத்து செய்த சம்பவம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.