இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கின.

Image

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 52 ரன்களும், டிம் டேவிட் 54 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் எதுவும் எடுக்காமல் 4 ஓவர்களில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

Image

இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களில் அவுட்டாகி நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் சூர்யகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

Image

பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி சூர்யகுமார் யாதவ் அதிரடிப் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்க, கோலி மறுபக்கம் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டு அப்பால் விரட்டிக் கொண்டிருந்தார். ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்க, இருவரும் பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்து அரைசதம் கடந்தனர். 69 ரன்களில் சூர்யகுமார் அவுட்டாக, ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார் கோலி.

Image

கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு சிக்ஸர் அடித்து விட்டு அடுத்த பந்திலேயே அவுட்டாகி கோலி வெளியேறினார். அடுத்து ஹர்திக் பாண்டியா ஒரு ரன், அடுத்து ஒரு பவுண்டரி விளாசி இந்திய அணியின் அறுதியிட்டு உறுதிசெய்தார். இதன்மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.