நேற்று நடந்த ஆசியக் கோப்பை தொடரின் முக்கியமான போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

துபாயில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 183 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இலங்கை அணியில் குஷால் மெண்டிஸ் – கேப்டன் ஷனகா இணை, அருமையாக விளையாடியது. மெண்டிஸ் 60 ரன்களும், ஷனகா 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

image

பெர்னாண்டோ 3 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெற்றிக்கு துணை புரிந்தார். வங்கதேச அணியில் ஹொசைன் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.