கருவுற்றிருந்த பசுமாட்டை தனது பாலியல் இச்சைக்கு ஆளாக்கி வன்கொடுமை செய்ததில் பசுமாடு உயிரிழந்த கொடூர சம்பவம் வங்காளத்தில் நடந்தேறியுள்ளது.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. வட சந்தன்பிடி பகுதியிலுள்ள நாம்கானா ப்ளாக்கில் வசித்து வருபவர் ப்ரத்யுத் புயியா. 29 வயதான இவர்மீது அண்டை வீட்டுக்காரர் ஆர்த்தி புயியா என்பவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், நள்ளிரவில் தங்கள் வீட்டிற்குள் பின்னால் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த கர்ப்பிணி பசுமாட்டை ப்ரத்யுத் கொடூரமான பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பசுமாடு உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

image

இந்த புகாரையடுத்து ப்ரத்யுத் மீது இந்திய சட்டப்பிரிவு 377-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பே ஆடு திருட்டு, வாகன திருட்டு மற்றும் வயல்களிலிருந்து காய்கறிகளை திருடியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் ப்ரத்யுத் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.