வரலாறு காணாத மழையால் பாகிஸ்தான் தத்தளித்து வருகிறது.
பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருவதால் பாகிஸ்தானின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்புள்ளாகியுள்ளது.
இந்நிலையில், விவசாயம் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. முக்கியமாக பேரீச்சை சாகுபடி சுமார் 80 சதவிகிதம் அளவுக்கு பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.