காதல் ஒருவரை எந்த பைத்தியகாரத்தனத்தையும் செய்ய வைக்கும், ஏன் செய்யாததை கூட செய்ய துணிய வைக்கும் என கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அந்த வகையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பாணியில் காதலனுக்காக இரண்டு டீனேஜ் பெண்கள் நடுரோட்டில் அடித்துக்கொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியிருக்கிறது. ஆனால் காதலனின் செயல்தான் எதிர்பாராத விதமாக அமைந்திருக்கிறது.

மகாராஷ்டிராவின் பைதான் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான இரண்டு டீனேஜ் பெண்கள் மக்கள் கூட்டம் நிறைந்த பேருந்து நிறுத்தம் முன்பு ஒரு பையனுக்காக சண்டையிட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட அந்த பையனுடன் ஒரு பெண் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த போதுதான் இன்னொரு பெண்ணுக்கு தெரிய வந்திருக்கிறது.

இதனைக்கண்டதும் ஆத்திரமடைந்த இரண்டு டீனேஜ் பெண்களில் ஒருவர் வாய் வார்த்தையாக கேள்வி கேட்க அது அப்படியே வாக்குவாதமாக மருவி தகராறாக மாறியிருக்கிறது. இதை அந்த பையனும் மக்களோடு மக்களாக சேர்ந்து வேடிக்கை பார்த்ததோடு, இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்விடத்தை விட்டு கம்பி நீட்டியிருக்கிறார்.

இருப்பினும் இருவரும் சண்டையை நிறுத்தியபாடில்லை. இதனையடுத்து இரண்டு டீனேஜ் பெண்களையும் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அங்கு இருவருக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.