அர்ஜென்டினாவில் ஆரோக்கியமாக பிறந்த இரண்டு குழந்தைகளை விஷ மருந்து செலுத்தி கொலை செய்த செவிலியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கார்டோபாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் சுமார் 8 குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்து சில நாட்களிலேயே இறந்துள்ளன. குழந்தைகளின் உடம்பில் பொட்டாசியம் அளவு அதிகமாகி உடல்நிலை பெரிதும் பாதித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குழந்தைகளுக்கு விஷ மருந்து செலுத்தியதாக  பிரெண்டா அகுவேரோ என்ற செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கிற்காக இந்த மாதம் மட்டும் ஒன்பது பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர்.

இதையும் படிக்க: சேலையூர் : வாகன சோதனையில் துப்பாக்கி, வெடிகுண்டுடன் 7 முக்கிய குற்றவாளிகள் கைது.!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.