விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 5-ம் தேதி, மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் பலரும் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர். காங்கிரஸின் இந்த போராட்டத்தை விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானத்தை எதிர்க்கவே, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய அதே நாளில் வேண்டுமென்றே கருப்பு உடை அணிந்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியது” என்று கூறியிருந்தார்.

காங்கிரஸ் போராட்டம்

இந்த நிலையில், பிரதமர் மோடியும் தற்போது இந்த விவகாரத்தில் காங்கிரஸை விமர்சித்திருக்கிறார். ஹரியானா மாநிலம், பானிபட்டில் ரூ.900 கோடி மதிப்பிலான இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலை திறப்புவிழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய மோடி, “சிலர் விரக்தியில் பிளாக் மேஜிக்கை நாடுகிறார்கள். பிளாக் மேஜிக்கை அவர்கள் பிரசாரம் செய்ய முயற்சித்ததை ஆகஸ்ட் 5-ம் தேதி நாம் பார்த்தோம்.

மோடி

கருப்பு ஆடை அணிவதன் மூலம் தங்களின் விரக்தியின் காலம் முடிந்துவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு பிளாக் மேஜிக் செய்தாலும், மூடநம்பிக்கைகளை நம்பினாலும், மக்கள் அவர்களை ஒருபோதும் நம்ப மாட்டார்கள்” என காங்கிரஸை மறைமுகமாக சாடினார்.

மேலும் இதே நிகழ்ச்சியில் இலவசங்களை விமர்சித்த மோடி, “தங்களின் சுயநல அரசியல் என்றால், யார் வேண்டுமானாலும் பெட்ரோல், டீசலை இலவசம் என்று அறிவிக்கலாம். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் நம் குழந்தைகளிடமிருந்து அவர்களின் உரிமைகளைப் பறித்து, நாடு தன்னிறைவு பெறுவதைத் தடுக்கும். மேலும், இது நாட்டின் வரி செலுத்துவோர் மீதான சுமையையும் அதிகரிக்கும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.