பாகிஸ்தானில் தனது மனைவியிடம் தவறான உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தி மிரட்டிய காவலரின் மூக்கு, காது மற்றும் வாயை அவரது கணவர் வெட்டி எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தானின் லாஹோர் நகரிலிருந்து 200 கிமீ தொலைவிலுள்ள ஜாங் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது. முகமது இஃப்திகார் என்ற நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்துகொண்டு காசிம் ஹயாத் என்ற போலீஸ் கான்ஸ்டிபிளை ஆளில்லாத இடத்திற்கு கடத்திச்சென்று கொடுமைப்படுத்தி அவருடைய மூக்கு, காது மற்றும் வாயை வெட்டி எடுத்துள்ளார்.

இதுகுறித்து காவல் அதிகாரி கூறுகையில், ‘’ஹயாத் தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த இஃப்திகார், தன்னுடன் 12 கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு, தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த ஹயாத்தை ஒரு ஆளில்லாத இடத்திற்கு கடத்திச்சென்றுள்ளார். அங்கு அவரை கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தி, கூர்மையான ஆயுதத்தால் அவரது உடல் உறுப்புகளை வெட்டி எடுத்துள்ளனர்’’ என்று கூறியுள்ளார். மிகவும் கவலைக்கிடமான நிலையிலுள்ள கான்ஸ்டபிள் தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

image

கடந்த மாதமே, கான்ஸ்டபிள் ஹயாத் மீது பாகிஸ்தான் தண்டனைச் சட்ட பிரிவுகள் 354 (பெண்ணைத் தாக்குதல்), 384 (பணம் பறித்தல்) மற்றும் 292 (ஆபாசப் படங்கள்) ஆகியவற்றின் கீழ் இப்திகார் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த புகாரில், ஹயாத் தனது மனைவியை அவருடன் தகாத முறையில் உறவுவைத்துக்கொள்ள வற்புறுத்துவதாகவும், இல்லாவிட்டால் தனது மகனை கொன்றுவிடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தனது மனைவியை வற்புறுத்தி உடலுறவு வைத்து, அதை வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது காவலரின் மூக்கு, காது மற்றும் வாயை வெட்டிய குற்றத்திற்காக இப்திகார் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடிவருவதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.