இந்தியாவின் முக்கியமான ஃபண்ட் மேனேஜரான பிரசாந்த் ஜெயின் ஹெச்டிஎப்சி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார். இந்திய மியூச்சுவல் பண்ட் துறையின் முக்கியமான பண்ட் மேனேஜராக இவர் கருதப்படுகிறார்.
ஹெச்டிஎப்சி டாப் 100, ஹெச்டிஎப்சி பிளக்ஸி கேப், ஹெச்டிஎப்சி பேலன்ஸ்ட் அட்வான்ஸ்டு பண்ட் ஆகிய மூன்று முக்கியமான பண்ட்களை இவர் நிர்வகித்து வந்தார். இந்த மூன்று பண்ட்கள் இவர் தலைமையில் சிறப்பான வருமானத்தை கொடுத்திருக்கிறது.
1994-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பேலன்ஸ்ட் அட்வான்ஸ்டு பண்ட் இத்தனை ஆண்டுகளில் 17 சதவீத வருமானம் கொடுத்திருக்கிறது. இந்த மூன்று பண்ட்களிலும் சேர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பண்ட்களை நிர்வகித்து வந்த இவர் தற்போது ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.