இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையான டி20 தொடரில் பங்கேற்பதாக இந்திய அணி இந்த வார இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்ல இருந்த நிலையில், துணை கேப்டன் கே.எல்.ராகுலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் டி20 தொடருக்கான இடம்பெற்றுள்ள அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா உறுதியாகி உள்ளதால் அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

BREAKING: KL Rahul tests positive for COVID-19 ahead of IND vs WI series, says report

முன்னதாக காயத்தால் அவதிப்பட்டு வந்த ராகுலுக்கு சமீபத்தில்தான் ஜெர்மனியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் குணமடைந்து வந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.