கடந்த வாரம் வியாழன் அன்று வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 80 ரூபாய் 4 பைசா என்ற அளவில் சரிந்து வணிகமானது. இதையடுத்து இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவதற்கு காரணம் பற்றி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

Timeline Of Russia-Ukraine Crisis: Why Did Conflict Start? What Is United  States' Role?

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் உக்ரைன் – ரஷ்யா போரே காரணம் என தெரிவித்துள்ளார்.

“உக்ரைன் – ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விலை ஏற்றம், சர்வதேச அளவில் நிதி நெருக்கடி போன்றவையே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது” நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.