ஒரே சமயத்தில் காதலித்த இரண்டு பெண்களையும் இளைஞர் ஒருவர் மணமுடித்துள்ள சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் அரங்கேறியிருக்கிறது.

திருமணங்கள் மற்றும் திருமணங்களால் நடைபெறும் சம்பவங்கள் பலவும் மக்களை அவ்வப்போது அதிர்ச்சிக்கும், ஆச்சர்யத்துக்கும் ஆளாக்குவதில் தவறுவதே இல்லை.

அந்த வகையில்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் பட பாணியில் சம்பவமொன்று நடந்திருக்கிறது.

image

லொஹர்தாக பாந்த்ரா என்ற பகுதியில் உள்ள பாந்தா என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் ஓரான் என்ற இளைஞன் ‘வாழ்ந்தா இவங்களோடதான் வாழுவேன்’ எனக் கூறி குசம் லக்ரா மற்றும் ஸ்வாதி குமாரி ஆகிய இரண்டு பெண்களையும் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

சம்பவத்தின் பின்னணி:

சந்தீப்பும், குசமும் பாந்தா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஜோடி ஒரு மூன்று ஆண்டுகளாகவே லிவிங் வாழ்வில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

இப்படி இருக்கையில், மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கள் சூளையில் வேலைபார்த்து வந்த சந்தீப் ஓரானுக்கு அதே சூளையில் பணியாற்றி வந்த ஸ்வாதி குமாரியுடன் தொடர்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியிருக்கிறது.

image

சந்தீப்பின் குடும்பத்தினர் முதலில் ஸ்வாதியுடனான உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் சந்தீப் விடாபிடியாக இருந்ததால் விஷயம் பஞ்சாயத்து நிர்வாகம் வரை சென்று, அவர்கள் கூடிபேசிய போதும், சந்தீப் திட்டவட்டமாக இருந்ததால் இருவரையும் திருமணம் செய்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள்.

இதனையடுத்து ஊர்மக்கள் முன்னிலையில் குசம், ஸ்வாதிக்கு திலகமிட்டு மனைவிகளாக ஏற்றிருக்கிறார்.

ALSO READ: 

காதல் கணவனைவிட்டு காதலனுடன் தஞ்சமடைந்த காதல் மனைவி.. ஓமலூரின் காத்துவாக்குல ரெண்டு காதல்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.