கூகுள், ஃபேஸ்புக் , அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதிச்சேவையில் ஈடுபடுவது பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கவலை தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடக நிறுவன நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ், இந்நிறுவனங்களுக்கு இடையே நிலவும் போட்டி மற்றும் தனிநபர் தகவல் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்தார். இந்த நிறுவனங்கள் நிதிச்சேவையில் ஈடுபடுவது தொடர் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் இவற்றை முறையாக கண்காணிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Here is how WhatsApp Pay stacks up against Google Pay and PhonePe |  Business Insider India

கடனை திரும்ப வசூலிப்பதில் கடுமையான நடைமுறையை இவை பின்பற்றுவதோடு, வாடிக்கையாளரை அகால நேரத்தில் அழைத்து ஆபாச வார்த்தைகளில் துன்புறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல எனத் தெரிவித்தார். இதுகுறித்து புகார் வந்தால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

Economic recovery stronger than expected, says RBI governor

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.