சமீபத்தில், பீகாரை சேர்ந்த சீமா என்ற 10 வயது சிறுமி, கல்வியின் மீதுள்ள தீராத ஆர்வத்தால், விபத்தில் தன்னுடைய ஒற்றை காலை இழந்த போதிலும், 1 கிலோ மீட்டர் வரை குதித்து குதித்து பள்ளி சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அச்சிறுமிக்கு செயற்கை காலை பொருத்த பல உதவிக்கரங்கள் நீண்டன.

தற்போது இதேபோன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒற்றை காலில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு குதித்து செல்லும் பர்வைஸ் (Parvaiz) என்ற இந்த மாணவர் ஜம்மு – காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா பகுதியை சேர்ந்தவர்.

தொடர் முயற்சியோடு பள்ளி சென்று வரும் பர்வைஸ், ’என் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருக்கிறது. இங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால், ஒற்றை காலில் பள்ளி செல்வது சிரமமாக உள்ளது, எனக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டால் நடந்து செல்வேன்’ என்கிறார்.

ஜெய்ப்பூர் ஃபூட் யு.எஸ்.ஏ தலைவர் பிரேம் பண்டாரி, பர்வைஸின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவருக்கு செயற்கை கால் இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

ஒற்றை காலில் பள்ளி செல்லும் சிறுவன்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணை அமைச்சர், ’இதை கவனத்துக்குக் கொண்டு வந்ததற்காக ANI செய்தி சிறுவனுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.