காரைக்கால் அருகே கழிவு நீரை குடித்த மீனவ கிராமத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 11-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை அடுத்த காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் மற்றும் விஜயன், திருமுருகன், மாணிக்கவேல் உள்ளிட்ட 14 பேருக்கு நேற்று நள்ளிரவு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

image

குழந்தைகள் உட்பட 11க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவாக காரணமாக ஒரேநேரத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தகவல் அறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து காரைக்கால் மேடு மீனவர் கிராமத்திற்கு உடனடியாக நேரில் சென்ற மருத்துவக் குழுவொன்று, அங்கு இருந்த குடிநீர் மற்றும் உணவு குறித்து ஆய்வு செய்தனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மீனவ கிராமத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க… தேனி: வாகன சோதனையில் சிக்கிய 12 கிலோ கஞ்சா – சிறுவன் உட்பட இருவர் கைது

image

இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சுகாதாரத் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் கிராமம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.