ஜம்முவில் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 10 தொழிலாளர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டத்தில் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில், 10 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். பாறைகள் மீண்டும் சரிந்து விழுந்ததால் மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டன. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 16 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்கலாம்: லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.