காலநிலை மாற்றம் தடுக்கப்படாமல் போனால் 2030க்குள் மனிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் 560 பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்று ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு புதிய அறிக்கை, காலநிலை மாற்றத்தால் நாம் வாழ்ந்து வரும் பூமி இன்னும் கூடுதலான பேரழிவுகளால் வரும் ஆண்டுகளில் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவிக்கிறது. தற்போதைய போக்குகள் கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்தால், உலகம் 2030 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 560 பேரழிவுகளைச் சந்திக்கும் என்றும், 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்டதை விட 400 பேரழிவுகள் அதிகமாக ஏற்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What can we learn from natural disasters?

வெள்ளம் மட்டுமல்லாது தொற்றுநோய்கள் அல்லது இரசாயன விபத்துக்கள் போன்ற பிற ஆபத்துகளும் ஏற்படக்கூடும் என்று ஐநா தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் காலநிலை தொடர்பான ஆபத்துகளின் அளவு, அதன் கால அளவு மற்றும் தீவிரத்தன்மையை அதிகரிக்கிறது. காலநிலையில் ஏற்பட்ட முதற்கட்ட மாற்றத்தால் 1970 முதல் 2000 வரை, உலகம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆண்டுக்கு 90 முதல் 100 நடுத்தர முதல் பெரிய அளவிலான பேரழிவுகள் ஏற்பட்டன.

Why calling extreme climate events 'natural' disasters is wrong | Euronews

2001ம் ஆண்டை விட 2030ல் கடுமையான வெப்ப அலைகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் 30 சதவீதம் அதிக வறட்சி ஏற்படும் என்றும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இது இயற்கை பேரழிவுகள் பற்றி மட்டும் பேசவில்லை, ஆனால் காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட கோவிட்-19, பொருளாதார சரிவுகள் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றையும் ஐநா தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.

13+ Things You Should Do to Survive a Natural Disaster

இயற்கை பேரழிவுகள் அதிகம் உள்ள பகுதிகளில் பெருகிவரும் மக்கள்தொகையால் பேரழிவுகளின் தாக்கமும் அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. 1990 இல், பேரழிவுகளால் உலகிற்கு ஆண்டுக்கு $70 பில்லியன் இழப்பு ஏற்பட்டது. ஆசியா-பசிபிக் பகுதி அதிக சேதத்தை சந்திக்கிறது, ஆண்டுதோறும் பேரழிவுகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 1.6 சதவீதத்தை இழக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.