சேலம் மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசினார். அப்போது “தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நல்லது செய்யும் ஒரே கட்சி அதிமுக தான். மக்களுக்கு பயன்படும் வகையில் தற்போது நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது” என பேசினார்.

image

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்… தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சொத்துவரி, வீட்டு வரி உள்ளிட்ட வரிகள் 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. இது கண்டிக்கத்தக்கது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு குறைத்திருந்த போதும் மாநில அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் குறைக்க முன்வர வில்லை.

image

“சேலம் மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் அவருடைய தனிப்பட்ட விருப்பம். அவரின் வருகையால் எந்த மாற்றமும் நிகழாது. அவர் ஆன்மிக சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் அதிமுக நிர்வாகிகள் யாரையும் அவர் சந்திக்கப் போவதில்லை. செய்தியாளர்கள் சசிகலா குறித்து கேள்விகளை தவிர்க்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.