குஜராத் அணிக்கு எதிரானப் போட்டியில், லக்னோ அணி 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் 15-வது சீசன் டி20 போட்டி, மும்பை மற்றும் புனேவில் உள்ள 4 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை துவங்கிய சூப்பர் லீக் போட்டிகள், வரும் மே மாதம் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த வருடம் புதிதாக லக்னோ, குஜராத் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த இரு அணிகளும் இன்றையப் போட்டியின்மூலம் அறிமுகமாகியுள்ளன. அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக முதன்முதலாக ஹர்திக் பாண்ட்யா அறிமுகமாகனார். இதுவரை, பஞ்சாப் கிங்ஸின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கியுள்ளார்.
லக்னோ, குஜராத் அணிகள் மோதும், ஐபிஎல்லின் 4-வது சூப்பர் லீக் ஆட்டம், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கே.ல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி, பேட்டிங்கில் களமிறங்கியது.
ஆனால், அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்திலேயே லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், குஜராத் அணியின் வேகப்பந்து விச்சாளரான முகமது ஷமியின் பந்துவீச்சில் டக் அவுட்டானார். இதையடுத்து ஷமி பந்துவீச்சில் லக்னோ அணியினர் ரன்கள் எடுக்க தடுமாறினர்.
மேலும், அவரின் ஸ்விங்கில் 3-வது ஓவரில் குவிண்டன் டி காக்கை 7 ரன்களிலும் (9), 5-வது ஓவரில் மணீஷ் பாண்டேவை 6 ரன்களிலும் (5) வீழ்த்தினார். பவர் ப்ளேவில் லக்னோ அணி ரன்கள் எடுக்க தடுமாறியது. அந்த அணி முதல் 4.3 ஓவர்களில் 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின்ன வந்த தீபக் ஹூடா நிதானமாக விளையாடினார். இதனால் அந்த அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. இவருடன் ஜோடி சேர்ந்த ஆயுஷ் பதோனியும் சிறப்பாக விளையாட மோசமான ரன் ரேட் மெல்ல உயர ஆரம்பித்தது. பின்னர், 41 ரன்களில் 55 ரன்கள் எடுத்தநிலையில், தீபக் ஹுடா அவுட்டாக, ஆயுஷ் பதோனி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை சேர்த்தது. முகமது ஷமி 3 விக்கெட்டுகளையு. வருண் ஆரோன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து குஜராத் அணி தற்போது களமிறங்கியுள்ளது.