உக்ரேனிய பெண்கள் குறித்து அவதூறாகவும், போர் குறித்து கேலியாகவும் பதிவிடப்பட்ட 4,000 பதிவுகளை ‘வெய்போ’ நீக்கியுள்ளது.
சீன நாட்டு சமூக ஊடகமான ‘வெய்போ’ தளத்தில், உக்ரைனின் நிலைமையை கேலி செய்யும் வகையில் வெளியான 4,000 க்கும் மேற்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. உக்ரேனியப் பெண்கள் தொடர்பான தகாத மற்றும் மோசமான கருத்துகளையும் ‘வெய்போ’ நீக்கியுள்ளது.
முன்னதாக, “18 முதல் 24 வயதுடைய உக்ரேனியப் பெண்களுக்கு அடைக்கலம் கொடுக்க விரும்புகிறோம்” என்ற ஹேஷ்டேக் வெய்போவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இப்பதிவுகளுக்கு கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து குறிப்பிட்ட அந்த ஹேஷ்டேக்கில் வெளியாகும் பதிவுகளை தணிக்கை செய்த பிறகே ‘பப்ளிஷ்’ செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.
இதையும் படிக்க: ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விண்ணப்பித்த உக்ரைன்