தலைநகர் டெல்லியில் மதுபானங்களை விற்பனை செய்து வரும் கடைகளில் மக்கள் திரளாக திரண்டு வந்த நிலையில் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது டெல்லி அரசு. அதாவது ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவம்’, ‘தள்ளுபடி’ மாதிரியான சலுகைகள் வழங்குவதை நிறுத்துமாறு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளதாம். முன்னதாக டெல்லியில் இயங்கிவரும் சில்லறை மதுபான விற்பனையாளர்கள் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

image

சில கடைகளில் கூட்ட நெரிசலினால் தள்ளு முள்ளு ஏற்பட்டதை அடுத்து டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாம். மதுபானக் கடையை ஒட்டி வசித்து வரும் மக்களுக்கு சங்கடம் கொடுத்ததாகவும், சட்டம் ஒழுங்கு சிக்கல் எழும் நிலை இருந்ததாலும் டெல்லி அரசு இந்த முடிவை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 31-க்கு பிறகு இந்த சலுகைகள் இல்லாமல் போகக்கூடும் என்ற கண்ணோட்டத்தில் மது பிரியர்கள் மதுபானங்களை வாங்க கடைகளில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் தான் அரசு அது கூடாது என சொல்லியுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறும் விற்பனையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.