கார்கிவ் நகரை ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்டு விட்டதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் எல்லைப் பகுதி அருகே அமைந்திருக்கும் கார்கிவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்த நிலையில், அவர்களை முன்னேற விடாமல் உக்ரைன் ராணுவத்தினர் தீவிர சண்டையில் ஈடுபட்டனர். வீதிகளில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் சண்டை முற்றியதால், பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், சுற்றி வளைத்த ரஷ்ய வீரர்களை விரட்டியடித்துவிட்டு, முழு கார்கிவ் நகரையும் மீட்டு விட்டதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, ரஷ்யாவின் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களையும், ராணுவ தளவாடங்களையும் அழித்து விட்டதாக உக்ரைன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: “உக்ரைனின் 4 பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம்” – ரஷ்யா