வாக்காளர்களுக்கு பரிசு பொருளாக ஆட்டுக்கறி கொடுக்கப்போவதாக வந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ஆட்டுக்கறியை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்களாருக்கு ஆட்டுக்கறி வழங்கப்போவதாக வந்த தகவலையடுத்து பறக்கும் படை அதிகாரி பரதன் ஆட்டுக்கறியை பறிமுதல் செய்து பேரூராட்சி தேர்தல் அதிகாரி மல்லிகாவிடம் ஒப்படைத்தார்.

image

அதில் ஒருகிலோ எடை கொண்ட பேக்கிங்கில் சுமார் 30 கிலோ ஆட்டுக்கறி ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்டுக்கறி கொடுத்த சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரனை செய்து வருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.