இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் இருபது ஓவர் தொடரில் கோலோச்ச இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் அனுபவ வீரர் ராகுல் காயத்தால் விலகிய நிலையில் கேப்டன் ரோகித்துடன் தொடக்க வீரராக கோலி அல்லது இஷான் கிஷன் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் இளம் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், ஆவேஷ்கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே முதல் போட்டியில் ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி வழங்கப்படாத நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் குறைந்த அளவிலான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்தியா -இலங்கை கிரிக்கெட் தொடர்களில் மாற்றம்