கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 26,981 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதனால் தற்போது மாநிலத்தில் 1,70,661 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 23,888 பேர் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

image

17,456 பேர் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 35 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 26,981 பேரில் 32 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பியவர்கள். இன்று பாதிக்கப்பட்டவர்களில் 15,477 பேர் ஆண்கள், 11,504 பேர் பெண்கள். 

image

தலைநகர் சென்னையில் 8007 பேர் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை 3082 பேர், செங்கல்பட்டு 2194 பேர், கன்னியாகுமரி 1008 பேர், திருவள்ளூர் 914 பேர், ஈரோடு 906 பேர், சேலம் 785 பேர், திருப்பூர் 756 பேர், மதுரை 732 பேர், காஞ்சிபுரம் 718 பேர், நெல்லை 713 பேர், கிருஷ்ணகிரி 638 பேர், திருச்சி 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.