சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பிரசாதங்கள் வழங்கும் கவுன்ட்டர்களின் எண்ணிக்கையை தேவசம் போர்டு அதிகரித்துள்ளது.

மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 31 ஆம் தேதி முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் அப்பம் மற்றும் அரவணை பாயாசம் விற்பனை மையங்களில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது. பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க பிரசாத விற்பனை கவுன்ட்டர்களின் எண்ணிக்கையை தேவசம் போர்டு அதிகரித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.