காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ளார் ஹரியானா மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் அசிம் கோயல். “தானொரு இந்துவா? கிறித்துவரா? இஸ்லாமியரா? என்பது ராகுலுக்கே தெரியாது” என அவர் தெரிவித்துள்ளார். இந்து மற்றும் இந்துத்வவாதி என்ற சொற்களுக்கு இடையிலான வேறுபாட்டை தனது பார்வையிலிருந்து அண்மையில் தனது கருத்தை சொல்லி இருந்தார் ராகுல் காந்தி. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இதனை தெரிவித்துள்ளார் பாஜக எம்.எல்.ஏimageஏ. 

என்ன சொன்னார் ராகுல் காந்தி?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த கட்சியின் மாநாட்டில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, இந்து, இந்துத்வவாதி என்ற இரு சொற்களும் வெவ்வேறான அர்த்தம் கொண்டவை என குறிப்பிட்டார். தான் இந்து என்றும், ஆனால், இந்துத்வவாதி அல்ல என்றும் பேசினார். மகாத்மா காந்தி இந்து, ஆனால் அவரை சுட்ட கோட்சே இந்துத்வவாதி. 

இந்தியா இந்துக்களின் நாடு, ஆனால், இந்துத்வவாதிகளுக்கான நாடு அல்ல. அதிகாரத்தை மட்டுமே விரும்பும் இந்துத்வவாதிகளை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, இந்துக்களை மக்கள் அமர வைக்க வேண்டும் என்று அப்போது ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில்தான் அதனை சாடியுள்ளார் பாஜக எம்.எல்.ஏ அசிம். 

“தானொரு இந்துவா? கிறித்துவரா? இஸ்லாமியரா? என்பது ராகுலுக்கே தெரியாது. அது குறித்து ஆய்வு பணிகள் கூட நடந்து வரலாம். அவர் தேசத்தை குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை. வேண்டுமானால் அவர் குறித்தும், அவரது குடும்பத்தின் வரலாறு மற்றும் புவியியல் குறித்தும் கவலை கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.