குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட விமானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்தனர். அதில் 13 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் கேப்டன் வருணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 80% காயங்களுடன் மீட்கப்பட்ட அவருக்கு வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

image

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ராணுவத் தளபதி நரவனே சந்திப்பு நிகழ்த்தவுள்ளார். மும்பையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேறக இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் முழு விவரம்! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.