இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் என இருவரும் சந்தித்துக் கொண்ட வீடியோ படம் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி உள்ளது. இருவரும் இணைந்திருக்கும் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார் யுவராஜ். 


இருவரும் சிறுவயது முதலே எதிரெதிர டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள். அது தொடர்பான காட்சி கூட ‘தோனி’ பயோபிக் படத்தில் வந்திருக்கும். தோனி பீகாருக்காகவும், யுவராஜ் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடி உள்ளார்கள். 

சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருவரும் கூட்டு சேர்ந்து எதிரணி வீரர்களை போட்டு தாக்கி உள்ளனர். ஆட்டத்தை இருவரும் கூட்டாக சேர்ந்து சிறப்பாக முடித்துக் கொடுப்பவர்கள். நல்ல நண்பர்கள் என இவர்கள் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். இந்தியாவின் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டு வெற்றிகளிலும் இருவரும் முக்கிய பங்காற்றி இருந்தனர். 

இந்த நிலையில் இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட போது பரஸ்பரம் நட்பு பாராட்டியுள்ளனர். அந்த படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. 


யுவராஜ் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் தனது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குவதற்கான நேரம் இது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அது என்ன? என்பதை அறிந்து கொள்ள காத்திருங்கள் என தெரிவித்துள்ளார் யுவராஜ். 

யுவராஜும், தோனியும் இணைந்து விளையாட்டு சார்ந்த புதிய தொழில் ஏதேனும் தொடங்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. மொத்தத்தில் இருவரும் இணைந்திருக்கும் இந்த போட்டோ ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. 

இதையும் படிக்கலாம் : இந்திய கிரிக்கெட் அணியின் ‌தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணமும் சில கேள்விகளும்? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.