பட்டுக்கோட்டை அருகே வங்கிக் கடன் தவணையை செலுத்தவில்லை எனக்கூறி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கொடுத்த தொந்தரவால் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்சாமி (55). இவரது மனைவி சவரியம்மாள். சமோசா வியாபாரம் செய்து வரும் அருள்சாமி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் ரூ. 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் இரண்டு மாதங்களாக பெய்யும் தொடர் மழை மற்றும் கொரோனா காரணத்தால் தொழில் சரியில்லாததால் வங்கிக் கடன் தவணையை செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

image

இதனால், வங்கி ஊழியர்கள் போனிலும் நேரிலும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாகவும் மரியாதைக் குறைவாக பேசியதாகவும் தெரிகிறது. இதில் விரக்தியடைந்த அருள்சாமி மற்றும் சவரியம்மாள் இருவரும் நேற்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து அருள்சாமியின் மகன் ஆரோக்கிய செபாஸ்டின் கொடுத்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரது உடலையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.