அதிமுக-வின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்!
அதிமுக -வின் செயற்குழு கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது. இந்நிலையில், அதிமுக அவைத் தலைவராக செயல்பட்டு வந்த மதுசூதனன் அண்மையில் மறைந்ததை தொடர்ந்து, அடுத்த அவைத் தலைவர் யார் என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதிமுக-வின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இன்று அதிமுக செயற்குழு கூட்டம்..!
அதிமுக. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உட்கட்சி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டம் முடிந்த பின்னர், அதிமுக. செயற்குழு கூட்டம் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது. , அதிமுக. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அவைத்தலைவர் தேர்வு, உட்கட்சி தேர்தல் ஆகியவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.