ரேக்ளா விளையாட்டு பந்தயம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவின் நகலை தமிழ்நாடு, கர்நாடகா அரசு தரப்புக்கு வழங்க மகாராஷ்டிரா அரசு வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ரேக்ளா பந்தயத்திற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தொடரபட்ட மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட போது தமிழகம், கர்நாடகாவில் ரேக்ளா பந்தயங்கள் நடைமுறையில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கில் வழங்கப்படும் உத்தரவு தமிழகம், கர்நாடகாவுக்கு பொருந்தும் என்பதால் அந்த மாநிலங்களுக்கு வழக்கு நகலை அவற்றிற்கு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கின் விசாரணை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.