நாடு முழுவதும் அடிப்படை காவலை மேம்படுத்த அதிக அதிகாரமிக்க காவல் தொழில்நுட்பத்தை அமைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் 56 ஆவது டிஜிபிக்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடிப்படை காவலை மேம்படுத்த, எதிர்கால தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம் என்றார். மாநிலங்களுக்கு இடையிலான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள காவல் படைகள் பயன்பெறும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பொதுமக்களை அணுகும் காவல்துறையின் போக்கில் நேர்மறையான மாற்றங்கள் தெரிவது பாராட்டுக்குரியது என்றும் பிரதமர் பேசினார்.
இதனைப்படிக்க…“மாணவிகளே! தற்கொலை வேண்டாம்; ஒரு மெசேஜ் போடுங்கள்” – கரூர் மாவட்ட ஆட்சியர் கடிதம்