6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையும் எனவும், அப்போது மழை மேலும் தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மயான பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை!
கொரோனா காலத்தில் பணிசெய்யும் மயான பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அங்கீகாரம், சிறப்பு சலுகை கிடைக்கும் வகையில் மயான பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுப்பெற்றது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில், இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்போது மழை தீவிடமடையும் எனவும் கூறப்படுகிறது.
தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. முன்னதாக இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெற வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்பட்ட நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது
தொடர் கனமழை… தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தற்போது ஆந்திரா மற்றும் வட தமிழகம் இடையே நிலைகொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்துவருகிறது.
இந்த நிலையில் மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தமிழகத்தில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், திண்டுக்கல், தேனி, தருமபுரி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மழையின் எதிரொலியாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைகாலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.