சில நிறுவனங்களில் முறைகேடு புகார்கள் வெளிவந்ததால் ஸ்பாக்கள் மற்றும் சலூன்களில் எதிர்பாலினத்தவர்கள் மசாஜ் செய்யக்கூடாது என்றுவுஹாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் புதிய நடைமுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வுஹாத்தி முனிசிபல் கார்ப்பரேஷனின் ஆணையர் தேவாஷிஷ் சர்மா கையெழுத்திட்ட புதிய நடைமுறை தரநிலை (SOP) உத்தரவில், “சில ஸ்பாக்கள் மற்றும் யுனிசெக்ஸ் பார்லர்களில் பல முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்களிடமிருந்து எண்ணற்ற புகார்கள் வந்துள்ளன. பொது ஒழுக்கம் மற்றும் குடிமை சமூகத்தை நிர்வகிக்கும் சட்டங்களை மதிக்க கார்ப்பரேஷன் கடமைப்பட்டுள்ளது. எனவே புதிய விதிகளின்படி, கவுகாத்தியில் உள்ள பார்லர்கள், ஸ்பா சலூன்களுக்குள் தனி அறைகள் அல்லது பிரத்யேக அறைகள் இருக்கக்கூடாது, பிரதான கதவுகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

மேலும், ஸ்பாக்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் போன்றவற்றுக்கான புதிய நடைமுறைகளின்படி, இனி ஆண்களுக்கு பெண்களோ அல்லது பெண்களுக்கு ஆண்களோ சிகிச்சை அல்லது மசாஜ் செய்ய முடியாது” என்றார்.

இதனைப்படிக்க…விடிய விடிய மது அருந்திய 3 பேர் பலியான விவகாரத்தில் திடீர் திருப்பம்: விஷம் கலந்தவர் கைது 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.