தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்த நிலையில் குடிசை, ஓடு மற்றும் சிமென்ட் கூரைகள் கொண்ட ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அதில் உயிர் தப்பிய மக்கள் நிவாரண உதவிகள் கிடைக்காததால், இடிந்த அதே வீட்டிலேயே வசிக்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 
image
வீடுகளை இழந்த பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு நிவாரணப் பணிகளை முடுக்கி விட வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.