துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்தது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது நியூசிலாந்து. 

image

மார்ட்டின் கப்டில் மற்றும் மிட்செல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கப்டில் 20 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் களத்திற்கு வந்தார். மிட்செல் உடன் 72 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். மிட்செல் 35 பந்துகளில் 49 ரன்களை எடுத்து அவுட்டானார். 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் விளாசி இருந்தார் அவர். 14.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் உடனான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி என அடுத்தடுத்து இரண்டு படுதோல்விகளை அடைந்துள்ளது இந்தியா. கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்கு இந்தியா முன்னேறுவது இப்போது கடினமாகி உள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.