கோவாவில் நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

கோவாவில் 2022-ஆம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோவா சென்றுள்ளார். இந்த சூழலில் நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.  

image

இது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ட்வீட்டில், நமது தலைவர் மம்தா பானர்ஜி முன்னிலையில் லியாண்டர் பயஸ் இன்று நம்முடன் இணைந்தார் என்பதை பகிர்வதில், மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் 2014 ஆம் ஆண்டு முதல் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜனநாயகத்தின் விடியலை நாம் உறுதி செய்வோம்” என்று  தெரிவித்துள்ளது.

முன்னதாக, பாலிவுட் நடிகை நஃபிஸா அலி மற்றும் மிரினாலினி தேஷ்பிரபு ஆகியோர் மம்தா முன்னிலையில் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தனர்.

இதனைப்படிக்க…கோவை: நிலங்களை கையகப்படுத்த நிர்வாகத்துக்கு அனுமதி தரவேண்டாம் – விவசாய பெண்கள் கோரிக்கை 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.