ஆர்யன் கான் பிணையில் வெளிவர ஷூரிட்டி கொடுத்துள்ளார் நடிகர் ஷாருக்கானின் கதாநாயகி

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் ஷாருக்கான். இவரது மகன் ஆர்யன் கான் அண்மையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சுமார் 22 நாட்கள் சிறைவாசம் இருந்த அவரை பிணையில் கொண்டு வர உதவியுள்ளார் ஷாருக்கான் உடன் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாக நடித்த ஜூஹி சாவ்லா. 

image

ஆர்யன் கானுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தை செலுத்துமாறு பணித்துள்ளது. அதை அவர் செலுத்த தவறினால் அதற்கு தான் பொறுப்பு என்பதற்கான உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் ஆஜராகி, உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு  ஏற்றுக் கொண்டுள்ளார் ஜூஹி சாவ்லா. 

“இதில் முக்கியமானது என்னவென்றால் ஆர்யன் கான் வீட்டுக்கு திரும்புவது தான்” எனத் தெரிவித்துள்ளார் நடிகை ஜூஹி சாவ்லா. 

கடந்த 2-ஆம் தேதி அன்று சொகுசு கப்பலில் போதை மருந்து இருந்த விவகாரத்தில் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இந்த கைது மற்றும் வழக்கு நடவடிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவும் கூர்ந்து கவனித்து வந்தது. 

இதையும் படிக்கலாம் : டி20 உலகக் கோப்பை : பனி பொழிவினால் திசை மாறுகிறதா அணிகளின் வெற்றி வாய்ப்பு? – ஓர் அலசல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.