ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலுக்கு ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை நன்கொடையாக அளித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவரான ராஷ்மி பிரபா என்ற பெண் மகாகாலேஷ்வரரின் பக்தர், கோவிலுக்கு தவறாமல் சென்று கொண்டிருந்த அவர், உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில் இறப்பதற்கு முன் தனது நகைகளை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்த விரும்பியுள்ளார்.

image

ராஷ்மி பிரபா உயிரிழந்த பிறகு கடந்த சனிக்கிழமையன்று, ஜார்க்கண்டில் உள்ள பொகாரோவில் வசிக்கும் அவரது கணவர் சஞ்சீவ் குமார் தனது மனைவியின் நகைகளான நெக்லஸ்கள், வளையல்கள் மற்றும் காதணிகள் உட்பட மொத்தம் 310 கிராம் எடையுள்ள சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கோயிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் மகாகாலேஷ்வர் கோவில் ஒன்றாகும்.

இதனைப்படிக்க…சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கு – கணவன், மனைவிக்கு 4 தூக்குதண்டனை 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.