இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இந்த பிரசவம் நடைபெற்றது. இரண்டு நிமிட இடைவெளியில் 3 பெண் குழந்தைகள் மற்றும் 3 ஆண் குழந்தைகள் என அறுவை சிகிச்சை மூலம் 6 குழந்தைகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து தாயும், ஆறு குழந்தைகளும் ஆரோக்கியத்துடனும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.