நேபாளத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு உள்ளிட்ட மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.
 
நேபாளத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்த அதீத கனமழையால், பல்வேறு மாகாணங்களில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மலை பாங்கான இடங்களில் காட்டாற்று வெள்ளத்தை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் வீடுகள் மண்ணோடு, மண்ணாக புதைந்தன. இந்நிலையில், நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம், சுவர் இடிந்து விழுந்தது என மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.
 
image
40-க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்னவானது என தெரியவில்லை. குறிப்பாக சுதுர் பஷ்சிம், கமாலி மாகாணங்கள் பெரிய அளவில் சேதத்தை சந்தித்துள்ளன. மழை பொழிவு குறைந்து மெல்ல வானிலை சீரடைந்து வருவதையடுத்து, அங்கு மீட்புப் பணிகள் துரித கதியில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.