புரட்டாசி மாதம் முடிவடைந்ததால், நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் விலை பத்து காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் முட்டை விற்பனை மந்தமாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், முட்டையின் விலை கடந்த இரு தினங்களில் 15 காசுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். தேவை அதிகரிப்பால் வரும் நாட்களில் முட்டையின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளாகக் கூறுகின்றனர்.