இருபது ஓவர் கிரிக்கெட்டிற்கு கிறிஸ் கெய்ல் ஆற்றிய சேவைகளை வார்த்தைகளால் விவரித்திட முடியாது என மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கெய்ரன் பொல்லார்ட் கூறியுள்ளார்.
பந்து வீச்சாளர்களின் மனதில் பதற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவர் கிறிஸ் கெய்ல் என குறிப்பிட்டுள்ள பொல்லார்ட், இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் சிக்ஸர்கள் விளாசிய வீரராக கெய்ல் திகழ்கிறார் என நெகிழ்ந்துள்ளார். நடப்பு இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரை வெல்வதே கெய்லின் குறிக்கோளாக உள்ளதாகவும் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.