நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியனாகி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த சீசனில் குரூப் சுற்றுடன் வெளியேறியிருந்தது சென்னை அணி. அப்போது சென்னை அணியின் கேப்டன் தோனி, ரசிகர்களுக்கு ஒரு செய்தி (மெசேஜ்) சொல்லி இருந்தார். இந்த கொண்டாட்ட தருணத்தில் அவர் சொன்ன செய்தியை  பார்க்கலாம். 

image

“இது ரொம்பவே கடினமான சீசனாக (2020) அமைந்தது. நாங்கள் ரொம்ப தவறு செய்திருந்தோம். கடந்த நான்கு போட்டிகளில் நாங்கள் விளையாடியதை போல ஆடியிருக்க வேண்டும். அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது. அடுத்த தலைமுறையினரிடம் பொறுப்பை கொடுக்க விரும்புகிறோம். 

‘நாங்கள் வலிமையாக திரும்பி வருவோம்’ இது தான் நான் ரசிகர்களுக்கு சொல்ல விரும்புகிற செய்தி. அதற்காகவே நாங்கள் அறியவும் படுகிறோம். அது தான் எங்களது அடையாளம். ருதுராஜ் சிறப்பான வீரர். கொரோனா இடர் அவரது ஆட்டத்தை அணை போட்டு தடுத்துவிட்டது” என தோனி அப்போது சொல்லி இருந்தார். தற்போது சென்னை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில் தோனி சொன்ன வார்த்தைகளை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  

ஆனால் இந்த சீசனில் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து, முதல் அணியாக பைனலுக்குள்ளும் நுழைந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ரசிகர்களுக்கு சொன்ன செய்தியை தோனி நிறைவேற்றிவிட்டார். கடந்த ஐபிஎல் சீசனில் தோனி சொல்லியிருந்த வாசனத்தை தற்போது ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.