சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அடுத்தாண்டும் தான் வழிநடத்துவேன் என்பதை மகேந்திர சிங் தோனி சூசகமாக தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணியுடனான வெற்றிக்கு பின்னர் மகேந்திர சிங் தோனி பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான அனைத்து தகுதியும் கொல்கத்தா அணிக்கு உள்ளதாக பாராட்டினார். ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக வலம்வருவது குறித்து வர்ணணையாளர் கேள்வி எழுப்பியபோது, இறுதிப் போட்டிகளில் அதிகமுறை தோல்வியடைந்து இருப்பதும் சென்னை அணியே என நகைப்புடன் கூறினார். தொடர்ந்து பேசிய தோனி, இந்தியா, தென்னாப்ரிக்கா, அமீரகம் என ஐபிஎல் தொடர் எங்கு நடைபெற்றாலும் ரசிகர்கள் அதிகளவில் திரண்டு வந்து ஆதரவளிப்பதற்கு நன்றி தெரிவித்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது போன்ற ஒரு வரவேற்பை ரசிகர்கள் துபாய் அரங்கில் கொடுத்ததாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

image

சிஎஸ்கேவிற்கு மிகப்பெரிய மரபை விட்டுச் செல்கிறீர்கள் என வர்ணணையாளர் கூறவே, நான் இன்னும் விட்டுச் செல்லவில்லையே என உற்சாகமிக்க சிரிப்புடன் கூறிவிட்டு தனது உரையாடலை முடித்துக் கொண்டார். தோனி உதிர்த்த வார்த்தைகள் அவர் மீண்டும் அடுத்தாண்டு சீசனில் சிஎஸ்கேவை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மனதில் விதைத்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.