நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டிக்குள் இரண்டாவது அணியாக நுழைந்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிரான பிளே-ஆஃப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் கொல்கத்தா த்ரில் வெற்றி பெற்றது. 7 விக்கெட்டுகள் இழப்பில் 136 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது கொல்கத்தா. 

image

பேட்டிங், பவுலிங் என இறுதி வரை கூட்டாக இணைந்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது கொல்கத்தா. 

அந்த அணிக்காக வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஷூப்மன் கில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் இணைந்து 96 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வெங்கடேஷ் 41 பந்துகளில் 55 ரன்களை எடுத்து வெளியேறினார். கில் 46 பந்துகளில் 46 ரன்களை எடுத்து அவுட்டானார். நித்திஷ் ராணா, 12 பந்துகளில் 13 ரன்களை எடுத்து அவுட்டானார்.

image

தினேஷ் கார்த்திக், மோர்கன், ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன் என நான்கு பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டாகி இருந்தனர். இறுதியில் ராகுல் திரிபாதி சிக்சர் விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெற செய்தார். 

image

இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து உள்ளது கொல்கத்தா. வரும் வெள்ளி அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் கொல்கத்தா விளையாடுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.