உதகை மலை ரயில் பயணிக்கும் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் சீரமைப்பு பணிகள் நடைபெற வசதியாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் பாதையில், மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழையால் இருப்புப் பாதையில் ராட்சத பாறைகளும் உருண்டு விழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து மலை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பாறைகளை அப்புறப்படுத்தும் பணிகள் துரித கதியில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால், மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.