ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்கலாமா என இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைகளுக்குப் பிறறு நவம்பர்- 1- ம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: பள்ளிகள் திறப்பு: பொறுப்பு, ரிஸ்க், ஆப்ஷன்கள்! – தமிழக அரசின் கடமைகள் என்னென்ன?
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செப்ம்பர் 1- ம் தேதியிலிருந்து 9 முதல் 12- ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் வழிபட வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழு விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.